உலக இயங்கியலுக்கு மாற்றங்கள் இன்றியமையாதவை. இயற்கையின் ஓர் அங்கமான மனிதன் இயங்கிக் கொண்டும், தன்னை மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும். மனித சிந்தனைகளும், அவற்றுக்கான இயக்கங்களும் கூட நேர்மறையான மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு வளர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
வரலாற்றின் பக்கங்களில் பெரும் மாற்றங்களை விதைத்த இளைஞர் இயேசு அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகளை தனது வாழ்வாக்கிக் கொண்டவர். இந்த பின்னணியில் தான் திருஅவையின் தற்போதைய தலைவராகிய திருத்தந்தை பிரான்சிஸ், மாற்றங்களின் தூதராக பார்க்கப்படுகிறார். தான் பொறுப்பேற்றது முதலே ஏழைகள், நலிவுற்றோர், மாற்று பாலினத்தவர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், புலம் பெயர்ந்தோர் என சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் வலிமை குன்றியவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்.
அறிவியல் பார்வையோடு சமகால பிரச்சனைகளை அணுகுபவர் என்பதற்கு அவருடைய ‘புகழனைத்தும் உமதே’ (Laudato Si - Praise Be To You) என்று தலைப்பிடப்பட்ட திருத்தூது மடலை சாட்சியாகக் கூறலாம். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பரிணாம வளர்ச்சியையும், பெரு வெடிப்பு கோட்பாட்டையும் நம்ப வேண்டும், விஞ்ஞான சமூகம் கூறும் முடிவுகளை விமர்சனபூர்வமாக அணுக வேண்டும் என்று புரட்சிகரமான கருத்துக்களை முன்வைத்தவர்.
இன்றைய உலகம் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், இணைய உலகம், மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகள், தொலைத்தொடர்பில் சாதனைகள் என வளர்ச்சி நோக்கி வெகு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் போர்கள், பிரிவினைவாதம், சூழலியல் பிரச்சனைகள், அதிகார குவிப்பு நோக்கி நகரும் மக்களாட்சி அரசுகள், சமூக ஊடகங்களின் எதிர்மறை தாக்கம் என்பது போன்ற பெரும் பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த நிலையில் தான் திருஅவை இளைஞர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு 2018-ம் ஆண்டை இளைஞர்களுக்காக அர்ப்பணித்ததோடு, அவர்களுக்கான உலக ஆயர் மாமன்றத்தையும் கூட்டியது. இம்மாமன்றம், இளைஞர் இயேசுவைப் போன்று நேர்மறை மாற்றங்களை, இன்றைய இளைஞர்கள் இவ்வுலகில் விதைக்க முடியும் என்ற நம்பிக்கையில் ‘இளைஞர்கள், நம்பிக்கை மற்றும் அழைத்தலுக்கான தெளிந்து தேர்தல்’ எனும் மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது. 2018, அக்டோபர் 3 முதல் 28 வரை நடைபெற்ற இந்நிகழ்வில் உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த 34 இளைஞர்கள் பங்கேற்றதும், அவர்களின் கருத்துக்களுக்கு திருஅவை செவிமடுத்ததும், அவர்கள் விவாதத்தின் ஓர் அங்கமாக திகழ்ந்ததும் மிக முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
முன்தயாரிப்போடு, திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வின் தொடர்ச்சியாக திருத்தந்தை பிரான்சிஸ் ஏப்ரல் 2, 2019 அன்று ‘கிறிஸ்து வாழ்கிறார்’ (Christus Vivit) என்று தலைப்பிடப்பட்ட திருத்தூது ஊக்கவுரையை வெளியிட்டார். அந்த ஊக்கவுரையின் முக்கிய கருத்துக்களை தமிழக இளைஞர்களுக்கும், இளைஞர் வழிகாட்டிகளுக்கும், பொது வாசகர்களுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியே ‘இளைஞர்களோடு மாற்றம் நோக்கி..’ என்ற இந்நூல்.
‘இளைஞர்களே நீங்கள் திருச்சபையின் எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலம்’ என்ற திருத்தந்தையின் தன்னுந்துதல் தரும் வார்த்தைகளோடு தொடங்கும் கட்டுரையில் நிகழ்கால முன்மாதிரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிற இளைஞர்களைப் பற்றி பேசியிருக்கும் நூலாசிரியர், தடம் பதிக்க விரும்பும் இளைஞர்கள் எத்தகைய தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறார். இளைஞர்களுக்கான உலக ஆயர் மாமன்றத்தின் தயாரிப்பு ஏடு சார்ந்த தகவல்கள், மாமன்ற நிகழ்வின் முக்கிய தருணங்கள், ஆயர்கள், இளைஞர் பிரதிநிதிகள் ஆகியோரது கருத்துக்கள், இளைஞர்களின் வளர்ச்சியில் திருஅவையின் பங்கு என விரிகிறது இந்நூல்.
இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் கருத்துக்களை உள்வாங்கியே இளைஞர் பணி ஆற்ற வேண்டும் என்பதும், சாதி, மத, இன பேதங்களை கடந்து திருஅவை அனைத்து இளைஞர்களோடும் பயணிக்க வேண்டும் என்பதும் விரிவாக கூறப்பட்டிருக்கிறது. 21ம் நூற்றாண்டை எதிர்கொள்வதற்காக இளைஞர்களுக்கு எத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும், எத்தகைய திறன்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் போன்ற கருத்துக்கள் செயல்வடிவம் பெறுமானால் சமூக மாற்றம் சாத்தியம் என்றே தோன்றுகிறது.
நமது செயல்திட்டங்கள் எத்திசை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, பதிலாக ஐக்கிய நாடுகள் சபையின் வளங்குன்றா நிறைவளர்ச்சிக்கான 17 உலகளாவிய குறிக்கோள்கள், அதனதன் முக்கியத்துவத்துடன் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் வாசிக்கப்பட்டு, இளைஞர் கூட்டங்களில், பயிற்சிகளில் விவாதிக்கப்பட வேண்டியவை.
இந்நூலின் ஆசிரியர் அருட்பணி. செபாஸ்டின் பிரான்சிஸ், எனது நண்பரும், வழிகாட்டியும், உடன்பணியாளருமாவார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உருவாக்கத்தில் நீண்ட கால கள அனுபவம் வாய்ந்த ஒரு ஆளுமை படைத்திருக்கும் இந்நூல் நேர்மறையான மாற்றத்திற்கான விதைகளை உங்கள் மனங்களில் விதைக்கும் என வெகு நிச்சயமாக நம்புகிறேன். இந்நூலை வெளியிடுவதில் சிகரம் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
அருமை நண்பர் செபாவிற்கு நன்றியும், பேரன்பும்.
என்றும் தோழமையுடன்
காட்வின் ஜினு (GJ)
18.01.2020
பின் குறிப்பு: 22.01.2020 அன்று வெளியான இந்நூலினை வாங்க
தொடர்பு எண்: 9443605794, விரைவில் அமேசானிலும்....
வரலாற்றின் பக்கங்களில் பெரும் மாற்றங்களை விதைத்த இளைஞர் இயேசு அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மதிப்பீடுகளை தனது வாழ்வாக்கிக் கொண்டவர். இந்த பின்னணியில் தான் திருஅவையின் தற்போதைய தலைவராகிய திருத்தந்தை பிரான்சிஸ், மாற்றங்களின் தூதராக பார்க்கப்படுகிறார். தான் பொறுப்பேற்றது முதலே ஏழைகள், நலிவுற்றோர், மாற்று பாலினத்தவர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், புலம் பெயர்ந்தோர் என சமூகத்தின் அடித்தட்டில் இருக்கும் வலிமை குன்றியவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்.
அறிவியல் பார்வையோடு சமகால பிரச்சனைகளை அணுகுபவர் என்பதற்கு அவருடைய ‘புகழனைத்தும் உமதே’ (Laudato Si - Praise Be To You) என்று தலைப்பிடப்பட்ட திருத்தூது மடலை சாட்சியாகக் கூறலாம். கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பரிணாம வளர்ச்சியையும், பெரு வெடிப்பு கோட்பாட்டையும் நம்ப வேண்டும், விஞ்ஞான சமூகம் கூறும் முடிவுகளை விமர்சனபூர்வமாக அணுக வேண்டும் என்று புரட்சிகரமான கருத்துக்களை முன்வைத்தவர்.
இன்றைய உலகம் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், இணைய உலகம், மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகள், தொலைத்தொடர்பில் சாதனைகள் என வளர்ச்சி நோக்கி வெகு வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் போர்கள், பிரிவினைவாதம், சூழலியல் பிரச்சனைகள், அதிகார குவிப்பு நோக்கி நகரும் மக்களாட்சி அரசுகள், சமூக ஊடகங்களின் எதிர்மறை தாக்கம் என்பது போன்ற பெரும் பிரச்சனைகளையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்த நிலையில் தான் திருஅவை இளைஞர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு 2018-ம் ஆண்டை இளைஞர்களுக்காக அர்ப்பணித்ததோடு, அவர்களுக்கான உலக ஆயர் மாமன்றத்தையும் கூட்டியது. இம்மாமன்றம், இளைஞர் இயேசுவைப் போன்று நேர்மறை மாற்றங்களை, இன்றைய இளைஞர்கள் இவ்வுலகில் விதைக்க முடியும் என்ற நம்பிக்கையில் ‘இளைஞர்கள், நம்பிக்கை மற்றும் அழைத்தலுக்கான தெளிந்து தேர்தல்’ எனும் மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது. 2018, அக்டோபர் 3 முதல் 28 வரை நடைபெற்ற இந்நிகழ்வில் உலகின் பல நாடுகளிலிருந்தும் வந்திருந்த 34 இளைஞர்கள் பங்கேற்றதும், அவர்களின் கருத்துக்களுக்கு திருஅவை செவிமடுத்ததும், அவர்கள் விவாதத்தின் ஓர் அங்கமாக திகழ்ந்ததும் மிக முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
முன்தயாரிப்போடு, திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வின் தொடர்ச்சியாக திருத்தந்தை பிரான்சிஸ் ஏப்ரல் 2, 2019 அன்று ‘கிறிஸ்து வாழ்கிறார்’ (Christus Vivit) என்று தலைப்பிடப்பட்ட திருத்தூது ஊக்கவுரையை வெளியிட்டார். அந்த ஊக்கவுரையின் முக்கிய கருத்துக்களை தமிழக இளைஞர்களுக்கும், இளைஞர் வழிகாட்டிகளுக்கும், பொது வாசகர்களுக்கும் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியே ‘இளைஞர்களோடு மாற்றம் நோக்கி..’ என்ற இந்நூல்.
‘இளைஞர்களே நீங்கள் திருச்சபையின் எதிர்காலம் மட்டுமல்ல, நிகழ்காலம்’ என்ற திருத்தந்தையின் தன்னுந்துதல் தரும் வார்த்தைகளோடு தொடங்கும் கட்டுரையில் நிகழ்கால முன்மாதிரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிற இளைஞர்களைப் பற்றி பேசியிருக்கும் நூலாசிரியர், தடம் பதிக்க விரும்பும் இளைஞர்கள் எத்தகைய தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறார். இளைஞர்களுக்கான உலக ஆயர் மாமன்றத்தின் தயாரிப்பு ஏடு சார்ந்த தகவல்கள், மாமன்ற நிகழ்வின் முக்கிய தருணங்கள், ஆயர்கள், இளைஞர் பிரதிநிதிகள் ஆகியோரது கருத்துக்கள், இளைஞர்களின் வளர்ச்சியில் திருஅவையின் பங்கு என விரிகிறது இந்நூல்.
இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் கருத்துக்களை உள்வாங்கியே இளைஞர் பணி ஆற்ற வேண்டும் என்பதும், சாதி, மத, இன பேதங்களை கடந்து திருஅவை அனைத்து இளைஞர்களோடும் பயணிக்க வேண்டும் என்பதும் விரிவாக கூறப்பட்டிருக்கிறது. 21ம் நூற்றாண்டை எதிர்கொள்வதற்காக இளைஞர்களுக்கு எத்தகைய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும், எத்தகைய திறன்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் போன்ற கருத்துக்கள் செயல்வடிவம் பெறுமானால் சமூக மாற்றம் சாத்தியம் என்றே தோன்றுகிறது.
நமது செயல்திட்டங்கள் எத்திசை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற கேள்விக்கு, பதிலாக ஐக்கிய நாடுகள் சபையின் வளங்குன்றா நிறைவளர்ச்சிக்கான 17 உலகளாவிய குறிக்கோள்கள், அதனதன் முக்கியத்துவத்துடன் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் வாசிக்கப்பட்டு, இளைஞர் கூட்டங்களில், பயிற்சிகளில் விவாதிக்கப்பட வேண்டியவை.
இந்நூலின் ஆசிரியர் அருட்பணி. செபாஸ்டின் பிரான்சிஸ், எனது நண்பரும், வழிகாட்டியும், உடன்பணியாளருமாவார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உருவாக்கத்தில் நீண்ட கால கள அனுபவம் வாய்ந்த ஒரு ஆளுமை படைத்திருக்கும் இந்நூல் நேர்மறையான மாற்றத்திற்கான விதைகளை உங்கள் மனங்களில் விதைக்கும் என வெகு நிச்சயமாக நம்புகிறேன். இந்நூலை வெளியிடுவதில் சிகரம் பெருமகிழ்ச்சி கொள்கிறது.
அருமை நண்பர் செபாவிற்கு நன்றியும், பேரன்பும்.
என்றும் தோழமையுடன்
காட்வின் ஜினு (GJ)
18.01.2020
பின் குறிப்பு: 22.01.2020 அன்று வெளியான இந்நூலினை வாங்க
தொடர்பு எண்: 9443605794, விரைவில் அமேசானிலும்....
No comments:
Post a Comment