வத்தலகுண்டில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது பெருமாள்மலை என்கிற சிற்றூர். அந்த சிற்றூரில் இருக்கிறது Bodhi Zendo மையம். யேசு சபை துறவி ஒருவரால் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வரும் ஜென் தியான மையம் அது. காப்பித் தோட்டங்கள்,வெண்ணெய்ப் பழ மரங்கள் (Avacado trees), மலைக்குன்றுகள், புல்வெளிகள் என பசுமை கொஞ்சும் நிலப்பரப்பு அது. அங்கு தான் பூமியை ஸ்பரிசிக்கும் புத்தரைக் கண்டேன்.
அங்கு தங்கியிருந்த ஒரு மாலையில் எதிரே இருந்த மலைக்குன்றினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் உச்சியில் ஒரு பழமையான தேவாலயமும், மணிக்கூண்டும் இருந்ததைக் கண்டேன். நகரின் நடுவே இரைச்சலில் முழ்கியிருக்கும் தேவாலயங்களை விட இப்படி நிசப்த வெளியில் தனித்திருக்கும் தேவாலயங்களுக்கென்று ஒரு தனி வசீகரமிருக்கிறது.
அதே மாலையில் குளிர் மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து என்னை அணைத்துக் கொண்டது. மேகங்களுக்கு நடுவே சற்று நேரம் மிதந்து கொண்டிருந்தேன். நான் கண்ட தேவாலயமும், மணிக்கூண்டும் பார்வையிலிருந்து மறைந்து போயிருந்தன. என்னை சுற்றிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளை நிற குளிர் மட்டுமே வியாபித்திருந்தது. குளிரின் நிறம் வெண்மை தானா?
பௌத்தத்தில் புத்தரின் தியான நிலைகள் பல்வேறு முறைகளில் விளக்கப்படுகின்றன. நான் பார்த்த புத்தர் தனது இடது கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு, வலது கையால் பூமியை தொட்டுணர்ந்த நிலையில் அமர்ந்திருக்கிறார். புத்தரின் இந்த நிலைக்கு பௌத்தம் அளிக்கும் விளக்கம் வெகு சுவராஸ்யமானது.
சித்தார்த்தன் போதி மர நிழலில் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறான். அவனது தியானத்தைக் கலைக்க விரும்பிய தீயசக்திகள் அவனை பயமுறுத்தி, அங்கிருந்து துரத்தப் பார்க்கின்றன. சித்தார்த்தன் அசைந்து கொடுக்கவே இல்லை. எல்லா முயற்சிகளும் தோற்றுப் போகவே, அவனிடம் இந்த பூமி எங்களுடையது, நீ இங்கிருந்து இப்போதே வெளியேறி விட வேண்டும் என்கின்றன. இந்த தருணத்தில் சித்தார்த்தன் பூமியைத் தொட்டு தனக்கு உதவி செய்ய அழைத்ததாகவும், பூமி திறந்து இவருக்கு இங்கிருக்க உரிமையுண்டு என்று பதிலளித்த போது தீய சக்திகள் அனைத்தும் மறைந்து போனதாகவும் நீள்கிறது அந்த கதை. சித்தார்த்தன் தன் சுயத்தைக் கண்டுணர்ந்து புத்தனானது இத்தகைய சூழலில் தான் என்கின்றன சில பௌத்த நூல்கள்.
புத்தர் பூமியைத் தொட்டு உணரும் இந்த நிகழ்வு மனிதர்கள் நிலத்தோடு தொடர்புடையவர்கள், மனித நாகரிகங்கள் அனைத்தும் மண்ணில் வேர்கொண்டு வளர்ந்தவை தான் என்பதை வலியுறுத்தி சொல்கிறது. மனிதர்களுக்கும், பூமிக்குமான இத்தகைய இணக்கம் துண்டிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் புத்தரின் தியான நிலை நமக்கு விட்டுச் செல்லும் செய்தி முக்கியமானது.
ஏப்ரல் 22 - உலக பூமி தினம்
அங்கு தங்கியிருந்த ஒரு மாலையில் எதிரே இருந்த மலைக்குன்றினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் உச்சியில் ஒரு பழமையான தேவாலயமும், மணிக்கூண்டும் இருந்ததைக் கண்டேன். நகரின் நடுவே இரைச்சலில் முழ்கியிருக்கும் தேவாலயங்களை விட இப்படி நிசப்த வெளியில் தனித்திருக்கும் தேவாலயங்களுக்கென்று ஒரு தனி வசீகரமிருக்கிறது.
அதே மாலையில் குளிர் மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து என்னை அணைத்துக் கொண்டது. மேகங்களுக்கு நடுவே சற்று நேரம் மிதந்து கொண்டிருந்தேன். நான் கண்ட தேவாலயமும், மணிக்கூண்டும் பார்வையிலிருந்து மறைந்து போயிருந்தன. என்னை சுற்றிலும் மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளை நிற குளிர் மட்டுமே வியாபித்திருந்தது. குளிரின் நிறம் வெண்மை தானா?
பௌத்தத்தில் புத்தரின் தியான நிலைகள் பல்வேறு முறைகளில் விளக்கப்படுகின்றன. நான் பார்த்த புத்தர் தனது இடது கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக் கொண்டு, வலது கையால் பூமியை தொட்டுணர்ந்த நிலையில் அமர்ந்திருக்கிறார். புத்தரின் இந்த நிலைக்கு பௌத்தம் அளிக்கும் விளக்கம் வெகு சுவராஸ்யமானது.
சித்தார்த்தன் போதி மர நிழலில் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறான். அவனது தியானத்தைக் கலைக்க விரும்பிய தீயசக்திகள் அவனை பயமுறுத்தி, அங்கிருந்து துரத்தப் பார்க்கின்றன. சித்தார்த்தன் அசைந்து கொடுக்கவே இல்லை. எல்லா முயற்சிகளும் தோற்றுப் போகவே, அவனிடம் இந்த பூமி எங்களுடையது, நீ இங்கிருந்து இப்போதே வெளியேறி விட வேண்டும் என்கின்றன. இந்த தருணத்தில் சித்தார்த்தன் பூமியைத் தொட்டு தனக்கு உதவி செய்ய அழைத்ததாகவும், பூமி திறந்து இவருக்கு இங்கிருக்க உரிமையுண்டு என்று பதிலளித்த போது தீய சக்திகள் அனைத்தும் மறைந்து போனதாகவும் நீள்கிறது அந்த கதை. சித்தார்த்தன் தன் சுயத்தைக் கண்டுணர்ந்து புத்தனானது இத்தகைய சூழலில் தான் என்கின்றன சில பௌத்த நூல்கள்.
புத்தர் பூமியைத் தொட்டு உணரும் இந்த நிகழ்வு மனிதர்கள் நிலத்தோடு தொடர்புடையவர்கள், மனித நாகரிகங்கள் அனைத்தும் மண்ணில் வேர்கொண்டு வளர்ந்தவை தான் என்பதை வலியுறுத்தி சொல்கிறது. மனிதர்களுக்கும், பூமிக்குமான இத்தகைய இணக்கம் துண்டிக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில் புத்தரின் தியான நிலை நமக்கு விட்டுச் செல்லும் செய்தி முக்கியமானது.
ஏப்ரல் 22 - உலக பூமி தினம்