I am Malala: The Girl Who Stood Up for Education and Was Shot by the Taliban
by Malala Yousafzai with Christina Lamb
யார் இந்த மலாலா?
2012ம் ஆண்டுக்கு பிறகு உங்களில் சிலர் இந்த பெயரை செய்திகளில் படித்திருக்கக்கூடும். விரைவில் அவர் நலம் பெற்று விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்திருக்கக் கூடும். 2014ம் ஆண்டு இந்தியாவின் கைலாஷ் சத்தியார்த்தியோடு இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற போது வியப்படைந்திருக்கக் கூடும்.
சிறு வயதிலிருந்தே பெண்களின் கல்விக்காக, உரிமைகளுக்காக போராடிய ஒரு வலிமையான போராளி தான் இந்த மலாலா, அவருடைய சுயசரிதையே மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் இப்புத்தகம்.தன்னுடைய இந்த சுயசரிதையை பதினாறாவது வயதில் இங்கிலாந்தின் பத்திரிகையாளரான கிறிஸ்டினா லாம்ப்புடன் இணைந்து எழுதியிருக்கிறார் மலாலா.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பஷ்தூன் இன மக்கள் அதிகமாக வாழும் ஸ்வாட் பள்ளதாக்கின் மின்கோரா எனும் சிறுநகரில் தனது பெற்றோருக்கு மூத்த மகளாக பிறந்தவர். ஆண் குழந்தைகளின் பிறப்பை மட்டுமே மகிழ்ச்சியாக கொண்டாடுகிற ஒரு சமூகத்தில் இவரது தந்தை ஜியாதுதீன் சற்றே வித்தியாசமானவர், முற்போக்கு சிந்தனை கொண்டவர். அத்தகைய தந்தையின் அரவணைப்பிலும், வழிகாட்டுதலிலும் சிறு வயதிலேயே பெண்களின் உரிமைக்காக பல தளங்களில் தைரியமாக பேசியவர், எழுதியவர். துப்பாக்கி குண்டுகளுக்கு நடுவிலும் கல்வியின் மீதும், புத்தகங்களின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்தவர்.
இந்த புத்தகம் மலாலாவின் சுயத்தை மட்டும் பற்றி பேசவில்லை என்பதில் தான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது. தான் பிறந்து வளர்ந்த சூழலை, அந்த நாட்டின் வரலாற்று பின்புலத்தோடும், கலாச்சார கூறுகளோடும் விளக்கியிருக்கிறார் மலாலா. மத அடிப்படைவாதிகளின் கைகளில் ஆட்சியும், அதிகாரங்களுமிருந்தால் என்னவெல்லாம் எதிர்மறையான விளைவுகளை சாமானிய மக்கள் சந்திக்க நேரும் என்பதற்கு இந்த புத்தகத்தில் நாம் வாசிக்கும் நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம்.
பனி போர்த்திய மலைகள், நீர் வீழ்ச்சிகள், தூய நீர் கொண்ட ஏரிகள் என செழுமையாக இருந்த ஒரு நிலப்பரப்பு தாலிபன்களின் பிடியில் சிக்குண்டு, ராணுவத்தின் தலையீட்டால் நடந்த தொடர் சண்டைகளால் சிதைவுற்று மெல்ல, மெல்ல போர்களின் நிலமாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் மலாலாவின் குடும்பம் உட்பட பல குடும்பங்கள் ஸ்வாட் பகுதியை விட்டு விலகி உள்ளூர் அகதிகளாக அலைத்து திரிவதையும் பதிவு செய்கிறது. இத்தகைய சூழலிலும் பெண்களுக்கு கல்வி அளிக்கும் மலாலாவின் தந்தை ஜியாதுதீன் நடத்தும் பள்ளிக்கூடம், அடர்ந்த காரிருளில் பெருவெளிச்சமாகத் தெரிகிறது. இத்தகைய வன்முறைகளுக்கு நடுவிலும் மலாலா கல்வி கற்பதையோ, பெண்களின் கல்விக்காக குரல் கொடுப்பதையோ நிறுத்தவே இல்லை.
மதங்களின் பெயரால் தாங்கள் நடத்தும் வன்முறை வெறியாட்டங்களை, பிற்போக்குத்தனங்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தாலிபன்களால் கொலை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதுவும் பெண்களுக்கு சம உரிமை, பெண்கள் கல்வி கற்பது போன்ற செயல்களை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இறுதியாக மலாலாவை நோக்கியும் அவர்களது கொடுங்கரம் நீள்கிறது. 2012ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி பள்ளியில் தேர்வு முடித்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வழியில் தாலிபன்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிறார் மலாலா. போராளிகளை துப்பாக்கி குண்டுகளால் கொன்று விட முடியுமா என்ன? மலாலாவின் இடது கண்ணின் ஓரம் குண்டு பாய்ந்து மூளைக்கு வெகு அருகாமையில் துளைத்து செல்கிறது. அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே வாசகர்களிடையே கண்ணீரை வரவழைக்கக் கூடியது.
படுகாயங்களுடன் ராவல்பிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் கூட அவருடைய உயிருக்கு பாதுகாப்பற்ற சூழலில், உலக அளவில் கவனம் பெற்று விட்ட மலாலாவுக்கு சர்வதேச உதவிகள் கிடைக்கின்றன. மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்தின் பிரிம்மிங்காம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. மருத்துவ குழுவின் உதவியோடு மலாலா மீண்டு வரும் பகுதி, நல்ல மனிதர்களும், நம்பிக்கையும் துணையிருந்தால் வாழ்வின் மிக மோசமான நிகழ்வுகளையும் கடந்து விடலாம் என்ற உணர்வை வாசகர்களுக்குள் விதைத்து விட்டு போகிறது.
நள்ளிரவில் உருவாக்கப்பட்ட தேசத்திலிருந்து வந்த ஒரு சாமானிய பெண்ணின் குரல் இன்றும் கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களின் குரலாக உலகெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டு வந்த மலாலா ஐநா சபையில் தான் ஆற்றிய முதல் உரையின் போது இவ்வாறு குறிப்பிட்டார், ‘ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம் மற்றும் ஒரு பேனா உலகை மாற்றி விட முடியும்’. முடியும் தானே.
பி.கு. 'நான் மலாலா' என்ற பெயரில் தமிழிலும் மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது.
by Malala Yousafzai with Christina Lamb
யார் இந்த மலாலா?
2012ம் ஆண்டுக்கு பிறகு உங்களில் சிலர் இந்த பெயரை செய்திகளில் படித்திருக்கக்கூடும். விரைவில் அவர் நலம் பெற்று விட வேண்டும் என்று பிரார்த்தனை செய்திருக்கக் கூடும். 2014ம் ஆண்டு இந்தியாவின் கைலாஷ் சத்தியார்த்தியோடு இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற போது வியப்படைந்திருக்கக் கூடும்.
சிறு வயதிலிருந்தே பெண்களின் கல்விக்காக, உரிமைகளுக்காக போராடிய ஒரு வலிமையான போராளி தான் இந்த மலாலா, அவருடைய சுயசரிதையே மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் இப்புத்தகம்.தன்னுடைய இந்த சுயசரிதையை பதினாறாவது வயதில் இங்கிலாந்தின் பத்திரிகையாளரான கிறிஸ்டினா லாம்ப்புடன் இணைந்து எழுதியிருக்கிறார் மலாலா.
நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பஷ்தூன் இன மக்கள் அதிகமாக வாழும் ஸ்வாட் பள்ளதாக்கின் மின்கோரா எனும் சிறுநகரில் தனது பெற்றோருக்கு மூத்த மகளாக பிறந்தவர். ஆண் குழந்தைகளின் பிறப்பை மட்டுமே மகிழ்ச்சியாக கொண்டாடுகிற ஒரு சமூகத்தில் இவரது தந்தை ஜியாதுதீன் சற்றே வித்தியாசமானவர், முற்போக்கு சிந்தனை கொண்டவர். அத்தகைய தந்தையின் அரவணைப்பிலும், வழிகாட்டுதலிலும் சிறு வயதிலேயே பெண்களின் உரிமைக்காக பல தளங்களில் தைரியமாக பேசியவர், எழுதியவர். துப்பாக்கி குண்டுகளுக்கு நடுவிலும் கல்வியின் மீதும், புத்தகங்களின் மீதும் தீராக் காதல் கொண்டிருந்தவர்.
இந்த புத்தகம் மலாலாவின் சுயத்தை மட்டும் பற்றி பேசவில்லை என்பதில் தான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது. தான் பிறந்து வளர்ந்த சூழலை, அந்த நாட்டின் வரலாற்று பின்புலத்தோடும், கலாச்சார கூறுகளோடும் விளக்கியிருக்கிறார் மலாலா. மத அடிப்படைவாதிகளின் கைகளில் ஆட்சியும், அதிகாரங்களுமிருந்தால் என்னவெல்லாம் எதிர்மறையான விளைவுகளை சாமானிய மக்கள் சந்திக்க நேரும் என்பதற்கு இந்த புத்தகத்தில் நாம் வாசிக்கும் நிகழ்வுகளை உதாரணமாகச் சொல்லலாம்.
பனி போர்த்திய மலைகள், நீர் வீழ்ச்சிகள், தூய நீர் கொண்ட ஏரிகள் என செழுமையாக இருந்த ஒரு நிலப்பரப்பு தாலிபன்களின் பிடியில் சிக்குண்டு, ராணுவத்தின் தலையீட்டால் நடந்த தொடர் சண்டைகளால் சிதைவுற்று மெல்ல, மெல்ல போர்களின் நிலமாக மாறுகிறது. ஒரு கட்டத்தில் மலாலாவின் குடும்பம் உட்பட பல குடும்பங்கள் ஸ்வாட் பகுதியை விட்டு விலகி உள்ளூர் அகதிகளாக அலைத்து திரிவதையும் பதிவு செய்கிறது. இத்தகைய சூழலிலும் பெண்களுக்கு கல்வி அளிக்கும் மலாலாவின் தந்தை ஜியாதுதீன் நடத்தும் பள்ளிக்கூடம், அடர்ந்த காரிருளில் பெருவெளிச்சமாகத் தெரிகிறது. இத்தகைய வன்முறைகளுக்கு நடுவிலும் மலாலா கல்வி கற்பதையோ, பெண்களின் கல்விக்காக குரல் கொடுப்பதையோ நிறுத்தவே இல்லை.
மதங்களின் பெயரால் தாங்கள் நடத்தும் வன்முறை வெறியாட்டங்களை, பிற்போக்குத்தனங்களை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தாலிபன்களால் கொலை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதுவும் பெண்களுக்கு சம உரிமை, பெண்கள் கல்வி கற்பது போன்ற செயல்களை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இறுதியாக மலாலாவை நோக்கியும் அவர்களது கொடுங்கரம் நீள்கிறது. 2012ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி பள்ளியில் தேர்வு முடித்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வழியில் தாலிபன்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிறார் மலாலா. போராளிகளை துப்பாக்கி குண்டுகளால் கொன்று விட முடியுமா என்ன? மலாலாவின் இடது கண்ணின் ஓரம் குண்டு பாய்ந்து மூளைக்கு வெகு அருகாமையில் துளைத்து செல்கிறது. அதன் பிறகு நடக்கும் நிகழ்வுகள் எல்லாமே வாசகர்களிடையே கண்ணீரை வரவழைக்கக் கூடியது.
படுகாயங்களுடன் ராவல்பிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகும் கூட அவருடைய உயிருக்கு பாதுகாப்பற்ற சூழலில், உலக அளவில் கவனம் பெற்று விட்ட மலாலாவுக்கு சர்வதேச உதவிகள் கிடைக்கின்றன. மேல் சிகிச்சைக்காக இங்கிலாந்தின் பிரிம்மிங்காம் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது. மருத்துவ குழுவின் உதவியோடு மலாலா மீண்டு வரும் பகுதி, நல்ல மனிதர்களும், நம்பிக்கையும் துணையிருந்தால் வாழ்வின் மிக மோசமான நிகழ்வுகளையும் கடந்து விடலாம் என்ற உணர்வை வாசகர்களுக்குள் விதைத்து விட்டு போகிறது.
நள்ளிரவில் உருவாக்கப்பட்ட தேசத்திலிருந்து வந்த ஒரு சாமானிய பெண்ணின் குரல் இன்றும் கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களின் குரலாக உலகெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டு வந்த மலாலா ஐநா சபையில் தான் ஆற்றிய முதல் உரையின் போது இவ்வாறு குறிப்பிட்டார், ‘ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு புத்தகம் மற்றும் ஒரு பேனா உலகை மாற்றி விட முடியும்’. முடியும் தானே.
பி.கு. 'நான் மலாலா' என்ற பெயரில் தமிழிலும் மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது.
No comments:
Post a Comment